UPDATE ABOUT SCHOOL HOLIDAYS
நாளை மே மாதம் 20ம் திகதி அரச பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதல் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்திருந்த நிலையில் இரு மாகாணங்களின் பாடசாலைகள் நாளை நடைபெறும் என மாகாண திணைக்களங்கள் தீர்மானம் எடுத்து இருந்தன.
வட மாகாண கல்வி திணைக்களம் மற்றும் மேல் மாகாண கல்வி திணைக்களம் என்பன அவையாகும்..
எனினும் நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) தினம் விடுமுறை தினமாகப் பிரகடனப் படுத்தப் படுவதாக கல்வி அமைச்சு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
மேல் மாகாண மற்றும் வடமாகாண கல்வித் திணைக்களங்கள் அறிவித்தல் அடிப்படையில் பாடசாலை நடைபெறுவதற்கான சாத்தியங்கள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கத
விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகளில் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.*