Arunalu sittham childrens art competition 2021-COMMERIAL BANK

Arunalu sittham childrens art competition 2021-COMMECIAL BANK

CLOSING DATE- 25.11.2021

அன்பார்ந்த பிள்ளைகளே,

உங்கள் மனதில் தோன்றும் அழகான எண்ணங்களை ஓவியமாக வரைந்து அனுப்புங்கள். கொமர்ஷல் வங்கியின்   அருணலு சித்திரம் சிறுவர் சித்திரப்போட்டி மூலம் அந்த ஓவியங்களுக்கு  பரிசுகளைத் தர Commercial bank தயார் ஆக உள்ளது 

பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள்

முன் ஆரம்ப பள்ளிப் பிரிவில் 25 சிறப்பு ஆக்கங்களுக்காக ரூபா பத்தாயிரம் வீதம் (ரூ. 10,000/-) பணப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மேலும் 50 திறமையாளர்களுக்கு சான்றிதழ் பத்திரங்கள் வழங்கப்படும்.

ஏனைய போட்டிகளுக்கு முதலாவது, இரண்டாவது, மூன்றாவது இடங்களுக்கு முறையே ரூபா ஒரு லட்சம் (ரூ. 100,000/-), ரூபா எழுபத்தையாயிரம் (ரூ. 75,000/-), ரூபா ஐம்பதாயிரம் (ரூ. 50,000/-) வீதம் பணப் பரிசுகள் மற்றும் சான்றுப்பத்திரங்கள், சிறப்பு திறமைப் பரிசுகள் 25 இற்காக ரூபா பத்தாயிரம் (ரூ. 10,000/-) வீதம் பணப் பரிசுகள் மற்றும் சான்றுப்பத்திரங்கள் மேலும் திறமைப் பரிசுகள் 50 இற்காக சான்றுப்பத்திரங்களும் வழங்கப்படும். அனைத்து பணப் பரிசுகளும் கொமர்ஷல் வங்கியின் அருணலு சிறுவர் சேமிப்புக் கணக்கில் வைப்புச் செய்யப்படும். 

போட்டி பிரிவு மற்றும் வயது எல்லைகள்

  1. முன் ஆரம்ப பள்ளிப் பிரிவு – வயது 04 – 05 (பிறந்த வருடம் 2016/2017)
  2. ஆரம்பப் பள்ளிப் பிரிவு – வயது 06 – 07 (பிறந்த வருடம் 2014/2015)
  3. பின் ஆரம்பப் பள்ளிப் பிரிவு – வயது 08 – 10 (பிறந்த வருடம் 2011/2012/2013)
  4. கனிஷ்ட பிரிவு – வயது 11 – 13 (பிறந்த வருடம் 2008/2009/2010)
  5. சிரேஷ்ட பிரிவு – வயது 14 – 16 (பிறந்த வருடம் 2005/2006/2007)

 மேல் குறிப்பிட்ட போட்டிகளுக்காக தொடர்புடைய வருடங்களில் பிறந்த தினம் அமைந்திருக்கும் அனைத்து சிறுவர்களும்  ஆக்கங்களை அனுப்பலாம்.  

கருப்பொருள் மற்றும் சித்திரம் வரைய பயன்படுத்தவேண்டிய கடதாசியின் அளவு

பிரிவு  கருப்பொருள்  கடதாசியின் அளவு  
முன் ஆரம்பப் பள்ளிப் பிரிவுதாம் விரும்பிய தலைப்புA3
ஆரம்ப பள்ளிப் பிரிவுதாம் விரும்பிய தலைப்புA3
பின் ஆரம்ப பள்ளிப் பிரிவுதாம் விரும்பிய தலைப்புA3
கனிஷ்ட பிரிவுஎமது வாழ்க்கை முறை14 அங். x 18 அங்.
சிரேஷ்ட பிரிவுஇயற்கையின் கொடை14 அங். x 18 அங்.

எமக்கு அனுப்ப வேண்டிய முறை

2021 ஒக்டோபர் 12 முதல் 2021 நவம்பர் 25 வரையான காலப்பகுதிக்குள் www.arunalusiththam.lk  இணையத்தளத்திற்குள் பிரவேசித்து உங்களால் வரைந்து முடிக்கப்பட்ட சித்திரங்களின் ஸ்கேன் (Scan) பிரதி மற்றும் அதன் விபரங்களை உள்ளடக்குவதன் மூலம் போட்டியில் கலந்துகொள்ளலாம். ஸ்கேன் செய்யப்பட்ட சித்திரங்கள் உள்ளடக்கப்படவேண்டியது jpeg மாதிரியில் என்பதுடன் அதன் அளவு மெகாபைட் 5 (5mb) இற்கு மேற்படக்கூடாது. இணையத்தளத்தில் உள்ள படிவத்தில் போட்டியாளரின் பெயர், பிறந்த தினம், முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கம் (கையடக்க), தாய்/தந்தை/பாதுகாவலரின் பெயர், பாடசாலை மற்றும் அதன் முகவரியை குறிப்பிட்டு அனுப்புதல்வேண்டும்.  

போட்டி நிபந்தனைகள்

  1. சித்திரப் போட்டிக்காக ஒருவருக்கு ஒரு சித்திரத்தை மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
  2. தாங்கள் விரும்பிய எந்தவொரு ஊடகத்தையும் பயன்படுத்த முடிவதுடன், ஒட்டும் தன்மையுள்ள, உலராத வர்ணங்களைப் பயன்படுத்தக்கூடாது.
  3. போட்டிக்காக சமர்ப்பிக்கப்பட்ட உங்கள் சித்திரம் இறுதிச் சுற்றுக்குத் தெரிவானால் அல்லது வெற்றி பெற்றால் நாம் கோரும்போது அந்த சித்திரத்தை எமக்கு ஒப்படைப்பதற்காக கவனமாக வைத்திருக்கவேண்டும்.
  4. வெற்றி பெற்ற ஆக்கங்கள் தொடர்பாக அறிவித்த பின், அதிபர்/கிராம உத்தியோகத்தர்/ சட்டத்தரணியொருவர்/சமாதான நீதவான் ஊடாக உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் சித்திரத்தின் மூலப்பிரதியை எம்மால் வழங்கப்படும் ஆலோசனைகளின்படி எமக்கு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
  5. உங்களால் சமர்ப்பிக்கப்படும் சித்திரம் சுய ஆக்கமாக இருத்தல் வேண்டும். அத்துடன் அது வேறு போட்டிகளுக்கு சமர்ப்பிக்கப்படாத சித்திரமாக இருப்பதுடன், மீண்டும் வரைதல், மற்றவர்களுக்கு வழங்கி வரைதலாகாது.
  6. சித்திரப் போட்டிக்காக சமர்ப்பிக்கப்படும் அனைத்து ஆக்கங்களினதும் உரிமை கொமர்ஷல் வங்கிக்கு உரித்தாவதுடன், அவை மீளவும் ஒப்படைக்கப்படமாட்டாது.
  7. சிரேஷ்ட நடுவர் குழுவொன்றின் ஊடாக பரிசுகள் மற்றும் சான்றிதழ் பத்திரங்களுக்குத் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதுடன், நடுவர்களின் தீர்ப்பே இறுதித் தீர்ப்பாகும்.
  8. இப்போட்டியில் கொமர்ஷல் வங்கியில் கடமையாற்றும் ஊழியர்களின் பிள்ளைகள் பங்குபற்ற முடியாது.

மேலதிக விபரங்கள் 0112 353 353

சித்திரங்களை வரைந்து கொள்ளுங்கள்.. ஸ்கேன் செய்து jpeg புகைப்பட வடிவத்தில் எடுத்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள submit drawing என்பதை அழுத்தி ஆக்கங்களை சமர்ப்பிக்க முடியும்..