holiday for schools?
*நாளை முதல் தமிழ், சிங்கள மற்றும் உயர்தர பரீட்சை நிலையமுள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு மாத்திரமே இவ் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஏனைய முஸ்லிம் பாடசாலைகளுக்கு பெப்ரவரி 6 ஆம் திகதி வரை பாடசாலை நடைபெறும். இதற்கமைய 2022 பாடசாலை கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவடைந்து, பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை க.பொ.த உயர்தர பரீட்சைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகி அடுத்த மாதம் பெப்ரவரி 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது