Unlimited internet packages for srilankans from april

ஏப்ரல் முதல் அனைவருக்கும் எல்லையற்ற இணைய டேட்டா கிடைக்கும் என இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழு அதிரடி அறிவிப்பு..

இலங்கை இணைய பாவனையாளர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தி.. அனைவருக்கும் unlimited internet packages வழங்குவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் இடம்பெறுவதாக இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது. குறித்த ஏற்பாடுகள் ஏப்ரல் மாத நடுப்பகுதி அளவில் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் முதலாம் திகதி இலங்கையில் இணைய சேவையை வழங்கும் அனைத்து நிறுவனங்களிடமும் குறித்த unlimited internet package பொதி களுக்கான திட்ட வரைவை வழங்குமாறு ஆணைக்குழு கோரியிருந்தது.

அதன்படி குறித்த திட்ட வரைவுகள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் முழுமையாக அதனை ஆராய்ந்த பின்னர் ஏப்ரல் 2021 எல்லையற்ற இணைய பொதிகளை இலங்கை நுகர்வோர்கள் எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தொலைபேசி இலக்கத்தை மாற்றாது அதே இலக்கத்துடன் வேறு ஒரு தொலைபேசி இணைப்பு வழங்குந ருக்கு  மாறுவதற்கான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாற்றங்கள் இலங்கை இணைய சேவையில் பெரிய ஒரு மாற்றத்தை உண்டுபண்ணும் என எதிர்பார்க்கப்படுகின்றது.