Foreign job vacancies in several countries- SLBFE

Foreign job vacancies in several countries-SLBFE

தற்போது அரச சேவையில் பணிபுரியும் எவருக்கும் அல்லது பல்நோக்கு திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள எந்தவொரு ஊழியருக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான தடைகளை நிக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் நெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற வெளிநாட்டு தொழில் சந்தைக்கு பிறன்மிக்க பணியாளர்களை வழிநடத்தும் வேலைத்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போது து குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, மூப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்தார்.இதேவேளை, தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு முகங்கொடுத்து அந்நிய செலாவணிமற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜப்பான், போலந்து, ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு துறைகளில் திறமையான் பணியாளர்களுக்கான வேலை வெற்றிடங்களை இலக்காகக் கொண்டு மொழி மற்றும் தொழில் பயிற்சி இட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐப்பானில் மட்டும், வயது வந்தோருக்கான பராமரிப்பு மற்றும் கேட்டரிங் துறையில் 350,000க்கும் மேற்பட்ட வேலை காவியிடங்கள் உள்ளன, மேலும் ஜப்பானிய மொழி புலமை அவசியம் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை, தொழிற்பயிற்சி அதிகாரசபை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியசும் உள்ளிட்ட அரச மற்றும் கனியார் துறைகளுக்கு ஜப்பானிய மொழி கல்வியறிவு வேலைத்திட்டங்களை துரிதமாக. நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். இறமையானதொழிலாளர்களின் உற்பத்தி அதிக ஊதியம் பெறும் வேலைகளுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தும் மற்றும் ஐரோப்பா உட்பட பல நாடுகளில் செவிலியர் சேவைகளுக்கு அதிக தேவை உள்ளது.