Important notice about coconut oil issue

மிக முக்கியமான அறிவித்தல்.. முடிந்தவரை அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்..

நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயனப் பதார்த்தங்கள் கலந்த ஒரு தொகை தேங்காய் எண்ணெய் நாட்டு மக்களின் பாவனையில்  சுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது..

ஒருவேளை நீங்கள் வீட்டில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தேங்காய் எண்ணெய் கூட குறித்த புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.

அவ்வாறு குறித்த தேங்காய் எண்ணெய் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கழிவு பதார்த்தங்களை கொண்டது என்பதை அறிவது? வீட்டில் செய்யும் சிறிய பரிசோதனை மூலம் கண்டறியலாம்.

பரிசோதனை 1.

நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தேங்காய் எண்ணையை குளிர்சாதனப் பெட்டியினுள் வைத்து 2 மணிநேரத்தின் பின்னர் அதனை மீளவும் அவதானிக்கவும்.. ஒரு வேளை குறித்த தேங்காய் எண்ணெயில் இருந்து குமிழிகள் வெளியேறினால் நச்சு தன்மை அதிகமாக உள்ளது என்பது அர்த்தமாகும்..

பரிசோதனை 2

குறித்த தேங்காய் எண்ணையை பயன்படுத்தி ஏதேனும் காய்கறிகளை சமைக்கும் போது அதனுள் சிறிய அளவு வெல்லைப்பூடு சேர்க்கவும்.. குறித்த வெள்ளை பூடு சிவப்பு நிறமாக மாறினால் அதில் குறிப்பிடத்தக்க அளவு நச்சுத்தன்மை இருக்கலாம்.. அது எந்த நிறத்துக்கும் மாறாமல் வெள்ளை நிறத்தில் இருந்தால் எந்தவிதமான நச்சுத் தன்மையும் கிடையாது என வைத்தியர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

உங்கள் வீட்டில் இருக்கும் தேங்காய் எண்ணையை குறித்த இரண்டு பரிசோதனைகளுக்கு உட்படுத்தி உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பின்வரும் தகவலை உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பொறுப்பு நம் எல்லோருக்கும் உள்ளது.

source-tamilwin.com