35th Convocation (Part II) of the University of Jaffna

35th Convocation (Part II) of the University of Jaffna

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 35வது பொது பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார்.

கோவிட் பெருந்தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதனை கூறியுள்ளார்.

பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக்குழு ஒன்று கூடியது. இதன் போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த மாதம் 07, 08 மற்றும் 09ம் திகதிகளில் பொது பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் கட்ட நடவடிக்கையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், பட்டமளிப்பு விழாவை நிகழ்நிலைக்கு மாற்றுவது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 23ம் திகதி அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

முன்னதாக யாழ். பல்கலைக்கழகத்தின் 35வது பொது பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இம் மாதம் 16, 17 மற்றும் 18ம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

இது தொடர்பாக பத்திரிகையில் வெளியான அறிவித்தல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..அதனை வாசிக்கவும்.